ஜாலி... இன்னைக்கு மெட்ரோவில் இலவசமா பயணிக்கலாம்!
அக்டோபர் 5ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள லீக் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கிடக்கின்றனர். இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே ஆன்லைனில் முடிந்து விட்டன. அதன்படி இன்று நடைபெறவுள்ள 5வது லீக் போட்டி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளதால், தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரமாக களமிறங்க உள்ளன. அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உகந்த மைதானம் என்பதால் இந்திய அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியை காண செல்பவர்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் வாங்கிய அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...