ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த சிறுமி.. வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கொடூரர்கள்!

 
பாலியல் பலாத்காரம்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சித்தகங்கா மடத்தில் வருடா வருடம் நடபெறும் ஆண்டு விழா இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி கடந்த 4ம் தேதி சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இவ்விழாவில் பங்கேற்க சென்றார். இதையடுத்து அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று நண்பருடன் அமர்ந்து பேசினார்.

இதை பின்தொடர்ந்த 3 பேர் கவனித்தனர். இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். இந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று மிரட்யியுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட 3 பேரும் சிறுமியை தனியாக  பந்திப்பாலய பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிய வந்ததையடுத்து 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web