எஸ் ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.... பரபரப்பு!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 59 வயது கணேசன். இவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 27 வயது கலைவேந்தன் என்பவர் இரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மூன்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
பெட்ரோல் குண்டு வெடித்ததில் வாசலில் அமர்ந்திருந்த கணேசன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவருடைய அலறல் சத்தம் கேட்டு கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவேந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் கணேசனின் மகளை கலை வேந்தன் ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா