காப்பத்துங்க... 100க்கும் மேற்பட்ட பள்ளி , கல்லூரி மாணவிகளை சீரழித்த கயவன்.. கதறும் இளம் பெண்கள்... !!
நாகர்கோவிலில் வசித்து வந்த காசி என்ற இளைஞர் பள்ளி கல்லூரி பெண்களை ஏமாற்றி 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மேல் சீரழித்தார். இவர் தற்போது கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசியை பொறுத்தவரை இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்தார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்தார். இதைக்காட்டி மிரட்ரல் விடுத்து பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்தார்.
தரவில்லை எனில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினார். இந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசிக்கு 4 மாடி வீடு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உண்டு. தொடர் புகாரின் பேரில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 120 பெண்களை சீரழித்ததாக அவரே ஒப்புக் கொண்டார். 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன. எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியதாக சொன்னார்கள். ஒரு பிரபல நடிகரின் மகள் , அரசியல்வாதி மனைவி , விஐபிக்கள் வரிசை நீண்டது. இதனால் சம்பந்தப்பட்ட விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருந்தனர். இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, இப்போது நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பாணியில் தற்போது கள்ளக்குறிச்சி அருண். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருண் பிரசாத்.
இவர் கடந்த சில வருடங்களாகவே, இன்ஸ்டாகிராம் மூலமாக பெண்களை ஏமாற்றி அவர்களை தன் இச்சைக்கு உபயோகப்படுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் திருட்டுத்தனமாக அதனை போட்டோ, வீடியோ எடுத்து தேவைப்படும் போதெல்லாம் அந்த பெண்களிடம் பணமும் பறித்து வந்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால், சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார். இதே போல் சங்கராபுரம் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததில் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சங்கராபுரம் போலீசுக்கே போய்விட்டார். இந்த புகாரின் அடிப்படையில் அருணின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படவே இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கொந்தளித்து போய்விட்டார்கள். இப்போது அருண் அந்த ஏரியாவிலேயே இல்லையாம். எங்கே இருக்கிறார் எனவும் தெரியவில்லை. சென்னையில் எங்கோ பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அவர் இன்னும் ஒன்றிரண்டு நாளில் வெளிநாடு போகப் போகிறாராம். அதனால், உடனே குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!