உச்சம் தொட்ட இஞ்சி ... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
புரட்டாசி மாதம் பொதுவாகவே அசைவப் பிரியர்கள் கூட பெருமாள் விரதம் இருப்பர் இதனால் காய்கறிகளின் விலை சற்றே உயர்ந்திருக்கும் .அதே நேரத்தில் மழைக்காலம் தொடங்குவதாலும் காய்கறிகளின் விளைச்சல் வரத்து பாதிக்கப்படும். இதனாலும் புரட்டாசி மாதத்தில் காய் விலை சற்றே அதிகரித்து இருப்பது வாடிக்கை தான் என்றாலும் தற்போது காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது. சென்னை முழுவதற்குமான காய்கறிகள் கோயம்பேடு சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சில்லறை கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுகிறது.
அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலை உச்சம் தொட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் , பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வர்த்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ34 க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ70 க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ40 க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ30 க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ 20 க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ ரூ89 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி விலை பட்டியல்
கிலோ(ரூபாயில்)
பெரிய வெங்காயம்-24
குடைமிளகாய் -35
பாகற்காய் -20
சுரைக்காய் -20
பட்டர் பீன்ஸ் -90
அவரைக்காய் -45
முட்டைக்கோஸ் 15
கேரட் -30
கொத்தவரை -25
வெள்ளரிக்காய் - 15
முருங்கைக்காய் -30
கத்தரிக்காய் -30
பெரிய கத்தரிக்காய் -50
பீன்ஸ் -60
தக்காளி -15
இஞ்சி-200-290
இதில் இஞ்சி விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...