மாணவிக்கு கஞ்சா கொடுத்து கணவன் மூலம் பலாத்காரம்.. வீடியோ எடுத்து ரசித்த தோழி!

ஆந்திர மாநிலம் கர்னூலில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்தபோது, தன்னுடன் படித்து வந்த பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் நண்பர்களாக இருந்தபோது பிரணவ கிருஷ்ணாவின் வீட்டிற்கு அடிக்கடி இளம்பெண் சென்று வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு கஞ்சா கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே, மாணவி சுயநினைவின்றி இருந்தபோது, பிரணவ் கிருஷ்ணா தனது கணவரை மாணவியை பலாத்காரம் செய்ய தூண்டியுள்ளார்.
அதன்படி, அவரது கணவர் கிருஷ்ண கிஷோர், இளம் பெண்ணை மனைவி கண்முன்னே பலாத்காரம் செய்ததை, அவரது மனைவி வீடியோவில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணிடம் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என அந்த இளம்பெண் கூறியதால் அந்த வீடியோவை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்து தம்பதியைக் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா