பெண்களே உஷார்... இளம்பெண்ணைக் கடத்தி, ரூ.2 லட்சத்துக்கு விற்ற இன்ஸ்டா நண்பன்!
இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த திருமணமான பெண்ணை, வேலை வாங்கித் தருவதாக கூறி, வேறொரு மாநிலத்துக்கு கடத்தி சென்று, ரூ.2 லட்சத்துக்கு அந்த பெண்ணை விற்று, அவருக்கு கட்டாயப்படுத்தி அந்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 23. திருமணமான இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நிறைய நண்பர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கீதா காணாமல் போனார். கணவர், குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினர் எங்கு தேடியும் கீதா கிடைத்தால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் கீதா, மர்க கும்பலால் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஆனால், இதற்கு கிதாவின் சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத ஆண்களுடன் ஏற்பட்ட பழக்கமே காரணம் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். கீதாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசத் தொடங்கி உள்ளனர். இவர் குடும்ப நிலையை கூறியுள்ளார். அப்போது, தனக்கு பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது, காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த நபரின் பேச்சை நம்பி கீதாவும் அதற்கு சம்மதம் தந்துள்ளார்.
வேலைத் தொடர்பாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி அந்த நபர், கீதாவை வீட்டை விட்டு வெளியே வர வழைத்துள்ளார். அப்போது தனியே வந்திருந்த கீதாவை கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து ராஜஸ்தானுக்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி கீதாவை வேறொருவருக்கு விற்றுள்ளனர். அங்கு அந்த நபருடன் கீதாவுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் கீதாவால் அங்கிருந்து தப்ப முடியவில்லை.
இதற்கிடையில் குடும்பத்தின் புகாரின் பேரில் காவல்துறை நடத்திய துரித விசாரணையின் பேரில் கீதாவின் இருப்பிடம் தெரிந்து அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மட்டும் பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமணமான ஒரு பெண்ணை, வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களே முகம் தெரியாதவர்களுடன் ஒரு எல்லை வைத்து கொண்டே பழகுங்கள். உங்கள் பழக்கம் குடும்பத்தாருக்கு தெரிந்தே இருக்கட்டும். தனியே யாரையும் நம்பி செல்லாதீர்கள். உஷாரா இருங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!