கதறியழுத ஞானவேல்ராஜா... இந்த சீனெல்லாம் செல்லாது... ஆவேசமடைந்த சமுத்திரக்கனி!

 
ஞானவேல் ராஜா

மைக்கைக் கண்டால், அதன் விரீயம் தெரியாமல் எதையாவது உளறிக் கொட்டுவது பலருக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் அமீரைத் திருடன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய பேச்சு, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. 

ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன் எனப் பலரும் அமீருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதில், இயக்குநர் கரு.பழனியப்பனின் பேச்சு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கதற செய்தது என்கிறார்கள் திரையுலகினர். மன்னிப்பு கேட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி, நடிகர் சிவக்குமார் உத்தரவிட்டும், வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஞானவேல் ராஜா. அதற்கு முன்பு, தன் நண்பர்களிடத்தில் மனக்குமுறலைக் கூறி, செய்வதறியாது கதறியிருக்கிறார் ஞானவேல் ராஜா என்கிறார்கள் நெருக்கமானவர்கள். 

இயக்குநர் அமீர் - ஞானவேல் ராஜா

இந்நிலையில், இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் செல்லாது என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி. இது குறித்து தனது அறிக்கையில், “பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.. அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். நீங்க தான் அம்பானி பேமிலியாச்சே” என்று ஆவேசமாக கூறியுள்ளார் சமுத்திரக்கனி.

இந்நிலையில், இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா, கரு.பழனியப்பன் என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நின்றார்கள். இதில், இது சூர்யா, கார்த்தியின் தூண்டுதலின் பெயரால் நடக்கிறதா? சிவக்குமார் இத்தனைக்குப் பிறகும் மெளனமாக இருப்பது ஏன் என்று பேசியிருந்தது ஞானவேல் ராஜாவைக் கதற வைத்தது என்கிறார்கள்.

’அமீரை அண்ணன் என்று தான் அழைப்பேன்’ என்று ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்திருந்ததை ஏற்றுக் கொள்ளும் முடிவில் கோலிவுட் இயக்குநர்கள் தயாராக இல்லை. இந்த பிரச்சினையில் அமீருக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘பருத்தி வீரன்’ பட ரிலீஸ் சமயத்தில், நடந்த ப்ளாஷ்பேக் காட்சிகளை நினைவுப்படுத்தி, ‘மொத்த பணத்தையும் எடுத்து வெச்சுட்டு, பகிரங்கமாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்கும் வரையில் விடுவதாய் இல்லை’ என்கிற முடிவில் இருக்கிறார்கள் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web