குட் நியூஸ்... உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 31,323 பேர் டிஸ்சார்ஜ்!

 
கொரோனா

உலகம் முழுவதுமாக கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் முழுவதுமாக குணமாகி 31,323 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மெல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் படுபாதாளத்தில் வீழ்ந்த பொருளாதரம் சீரடையவில்லை. நிலைமை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

Corona world

இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக பிஏ4 மற்றும் பிஏ வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 70 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 22 லட்சத்து 43 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 35 ஆயிரத்து 691 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Corona world

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 69 லட்சத்து 85 ஆயிரத்து 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web