இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவி செய்யும் கூகுள்.. ஆத்திரமடைந்த ஊழியர்கள் வீதியில் போராட்டம்..!!
இஸ்ரேலின் ராணுவத்திற்கு கூகுள் உதவி செய்வதாக கூகுள் ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போர் இன்னும் நீடிக்கிறது. காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் 18,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த இஸ்ரேல், காசான் பெண்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்துடன் இணைந்து புதிய திட்டமான Project Nimbus-ஐ ரத்து செய்ய கூகுள் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனியர்களை போரில் கொல்வதற்காக இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்துவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
![]()
அமெரிக்காவில் உள்ள கூகுள் அலுவலகங்கள் முன்பு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ‘இனப்படுகொலையை ஆதரிக்காதே’, ‘இனப்படுகொலையால் ஆதாயம் அடையாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் ராணுவத்திற்கு கிளவுட் சேவைகளை வழங்க கூகுள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சக்திவாய்ந்த கணினி வளங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாததால், கூகிளின் தகவல் மற்றும் கணினி வளங்களை கிளவுட் வசதிகள் மூலம் எங்கிருந்தும் அணுக முடியும் என்பதே இதன் பொருள். போரில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்தில் இருந்து கூகுள் விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
