அதிர்ச்சி... ஸ்டாம்ப் பேப்பரில் ரூ.500 நோட்டுகளை அச்சடித்த கிராஃபிக் டிசைனர் கைது!

 
 ஜஸ்டின்
கேரள மாநிலம் திருச்சூரியில் கிராஃபிக் டிசைனரான  ஜஸ்டின் என்பவர் போலியான 500 ரூபாய் நோட்டுகளை 50 ரூபாய் மதிப்பிலான முத்திரைத் தாள்களில் அச்சிட்டது தெரிய வந்த நிலையில், போலீசார் ஜஸ்டினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 திருச்சூரில் 500 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகளை ஸ்டாம்ப் பேப்பரில் அச்சடித்த கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார். திருச்சூர் பாவரட்டியைச் சேர்ந்த ஜஸ்டினை, கொடுங்கல்லூர் டி.வை.எஸ்.பி., வி.கே.ராஜூ தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். 50 ரூபாய் மதிப்பிலான முத்திரைத் தாள்களில் அச்சிடப்பட்ட 12 ரூபாய் 500 போலி கரன்சிகளையும், இதற்காக பயன்படுத்திய பிரிண்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
சந்தேகத்திற்கிடமான போலி ரூ.500 நோட்டைப் பெற்ற மருந்துவக்கடையின் உரிமையாளர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததும் இது குறித்த விசாரணை தொடங்கியது. அந்தக் கரன்சி போலியானது எனத் தெரிய வந்ததால் அவரைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி வாடிக்கையாளர் தனது மொபைல் எண்ணை மெடிக்கல் கடை உரிமையாளரிடம் கொடுத்திருக்கிறார்.
வாடிக்கையாளர் கொடுத்த எண் கிடைக்காததால் கடை உரிமையாளர் போலீசை அணுகினார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜஸ்டினை அழைத்து சென்று விசாரித்தனர். திருச்சூரில் உள்ள பல்வேறு கடைகளில் கடந்த 6 மாதங்களாக ஜஸ்டின் இப்படி போலியாக தயாரித்த ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web