அதிர்ச்சி... சிக்கன் பிரியாணியில் வெட்டுக்கிளி...!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வருகிறது அப்துல்காதரின் வெல்கம் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். எந்நேரமும் பிசியாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த உணவகத்தில் டேவிட் என்பவர் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றார். இவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்த போது அதில் வெட்டுக்கிளி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் அப்படியே பேக் செய்து கடைக்கு திருப்பி எடுத்து வந்து காண்பித்த கேட்டபோது, நீங்களே வெட்டுக்கிளியை போட்டுகிட்டு வந்திருப்பீங்க என கடை உரிமையாளர் விவாதம் செய்துள்ளார்.
இது குறித்து உணவுத்துறையில் புகார் அளிப்பேன் எனக் கூறியதற்கு எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என அலட்சியமாக கூறியுள்ளார். இதையடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலீசார், பிரியாணி பார்சலை எடுத்துச் சென்று, உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்குமாறு கூறி டேவிட்டை அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற உணவகங்களில், அடுப்பிற்கு மேலே எல்இடி பல்புகள் ஒளிர்வதால், அதிக வெளிச்சத்தை நோக்கி பறந்து வரும் விஷப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், பல்லிகள் என எது வேண்டுமானாலும் விழும் வாய்ப்புக்கள் அதிகம். மேலும், சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசு நிறைந்த தூசுகள், உணவுகளில் கலக்கும் வாய்ப்புக்களும் அதிகம் என்கின்றனர் உணவு பாதுகாப்பு துறையினர். அதனால் வாங்கி செல்லும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!