பெரும் சோகம்... தாய், சகோதரியைக் காப்பாற்றி வெள்ளத்தில் தந்தையை காப்பாற்ற சென்ற மகன் உயிரிழப்பு!

 
மகன் மரணம்

சென்னை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் 15 அடி தண்ணீரில், தன்னுடைய தாயையும், சகோதரியையும் காப்பாற்றி கரை சேர்த்து விட்டு, தந்தையை தேட சென்ற மகன், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் தந்தையைக் காப்பாற்ற சென்ற மகன், 3 நாட்கள் கடந்த பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. குறிப்பாக சென்னையின் போரூர்,  காரப்பாக்கம், மணப்பாக்கம்,  முகலிவாக்கம்,  வேளச்சேரி,  மேடவாக்கம்,  மடிப்பாக்கம்,  பள்ளிக்கரணை, முடிச்சூர்,  மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.

Chennai

சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது.  மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை.  மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அருண் என்ற இளைஞர் 3 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கியதை கண்டு மீட்கச் சென்ற நிலையில் அவர் திடீரென மாயமானார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

ஆனால் போலீசார் அருணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் இன்று காலை மூட்டை போல மிதந்து வந்த பொருளைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்த போது காணாமல் போன அருணின் சடலம் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அருணின் உறவினர்கள் போலீசாருக்கும் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்ததனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பெற்றோர்களை காப்பாற்ற சென்ற மகன் சடலமா மீட்கப்பட்டுள்ள சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web