புற்றுநோய்களை தடுக்கும் கொய்யா இலைத் தேநீர்!!

 
கொய்யா இலை தேநீர்

ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற என்னென்னெவோ செய்ய வேண்டியதில்லை. மாறாக சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அந்த வரிசையில் கொய்யாப்பழமும் அடங்கும்.கொய்யாவில் பல்வேறு மகிமைகள் உள்ளன. பலவித பயங்கர நோய்களை தடுக்கும் ஆற்றல் கொய்யாவிற்கு உள்ளது. மற்ற காலங்களை விட வெயில் காலங்களில் இந்த வகை பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். கொய்யாவை சாப்பிட்டு வருவதால் பல அபாயகர நோய்களை எல்லாம் நம்மால் தடுத்து விட முடியுமாம்.  
கொய்யாவில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.  கொய்யா இலைகளில் நிறைந்துள்ள  ஆண்டியாக்ஸிடண்ட்கள்   பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.  

கொய்யா பழங்களை போலவே கொய்யா இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதன் இலைகள் உடலில்   செரிமான சக்தியை மேம்படுத்துகின்றன.   உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும். மலச்சிக்கல்,   அசிடிட்டி மற்றும் குடல் வாய்வு  பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ந்து   கொய்யா இலைகளை போட்டு தேநீர்  குடிக்கலாம். உடலில் உள்ள  தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் உதவியாக இருக்கும்.   அதே போல் சருமத்தின் அழகை மெருகேற்றுவதிலும் கொய்யா இலைகளுக்கு நிகர் இல்லை. இதில் உள்ள ஆண்டி  ஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமம் பொலிவு பெற உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புது செல்களை உருவாக்கி விடுகின்றன. தொடர்ந்து கொய்யா தேநீர் குடிப்பதால் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறையும். 

கொய்யாப்பழம்

கொய்யாவில் நிறைந்துள்ள  நார்ச்சத்து   செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளை சரிசெய்யக் கூடியது.   சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும்.  நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். 
கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.  கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம். மற்ற காலங்களை விடவும் வெயில் காலங்களில் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். அதிக வெயில் போன்ற புற சூழல் தான் இதற்கு மூல காரணமே. கொய்யாவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்தை தடுத்து விடலாம்.
 கொய்யாப்பழம்
ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிக அளவில் கொய்யாவில் உள்ளது. அதே போன்று எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன. எனவே, நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை இந்த பழம் தரும். வெயில் காலங்களில் கொய்யாவை சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.கொய்யாவில் அதிக அளவில் மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் நரம்புகளை இலகுவாக்கி பாதிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ளும். அதே போன்று தசைகளில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகலில்  மட்டுமே சாப்பிடுவது நல்லது.  மதிய உணவை முடித்து 2 மணி நேரம் கழித்து  கொய்யாப்பழத்தை சாப்பிவதால்  அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web