விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 வீரர் ஆனார் குகேஷ்!!
இந்தியாவில் 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் செஸ் தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தார். தற்போது இந்திய செஸ் வீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் குகேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். முதல் முறையாக விஸ்வநாதன் ஆனந்தை அதிகாரப்பூர்வ பட்டியலில் கடந்து குகேஷ் சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் முதலிடத்தில் உள்ள குகேஷ் 2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் 2754 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திற்கும் தள்ளப்பட்ட்டுள்ளார். சர்வதேச பட்டியலில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 19வது இடத்தை பிடித்துள்ளார்.
இதனையடுத்து இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள குகேஷிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!