ஹமாஸ் தலைவர் படுகொலை எதிரொலி.. இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்!
ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரான் சென்றுள்ளார். தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர் கடந்த 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே அவரது படுக்கையறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் தனது ஈரானிய உளவாளிகள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எனவே, இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேலை தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஹிஸ்புல்லா எந்த நேரத்திலும் இஸ்ரேலை தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி உள்ளன. இந்நிலையில் இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்களின் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
