குஷியில் மாணவர்கள்... இன்று முதல் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

 
சான்றிதழ்
பழைய நண்பர்களைப் பார்க்கும் ஆவலில் குஷியில் மாணவர்கள் இன்று காலை முதலே தங்களது பழைய பள்ளிக்கு கிளம்ப தயாராகி வருகின்றனர். இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

சென்ற கல்வி ஆண்டுக்கான (2023-2024) பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த மே 6-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக மே 9-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேர்வு

இந்நிலையில் அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் லதா  வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள்

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களைப் பெறுவதற்காக இன்று தங்களது பள்ளிக்கு செல்லும் நிலையில், பலரும் தங்களது நினைவுகளையும், பழைய நண்பர்களையும் பார்க்கும் ஆவலில் ஒன்று சேர்கின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web