குடிக்க பணம் தரலை... பீர் பாட்டிலால் குத்திக் கொன்ற வாலிபர்.. சென்னையில் அதிர்ச்சி!
குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக பீர் பாட்டிலால் தொழிலாளியைக் குத்திக் கொலைச் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகர் (45). இவர் பழைய இரும்பு, பேப்பர் பொருட்களை வாங்கும் கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் பழைய பாட்டில்கள், இரும்பு, பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருபவர் கண்ணன் (28).
இந்நிலையில், பழைய பொருட்களை வாங்கும் போது மனோகரனுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பேக்கரி கடை அருகே மனோகரன் நடந்து சென்ற கொண்டிருந்த போது, சாலையோரத்தில் படுத்திருந்த கண்ணன், மனோகரனை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே, பழைய பொருட்களை விற்றதற்கான பணம் தராமல் மனோகரனை ஏமாற்றி வந்ததும், இப்போது குடிப்பதற்கு தன்னிடமே பணம் கேட்டதும் மனோகரனுக்கு ஆத்திரமேற்படுத்திய நிலையில் பணம் தர மறுத்துள்ளார். இந்நிலையில், கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து மனோகரன் வயிற்றில் கண்ணன் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தவாறு, ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.
இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மனோகரனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!