பகீர்... பயிரை மேய்ந்த வேலி.. தலைமைக்காவலர் 2 பெண்களிடம் செயின் பறிப்பு... !

 
சபரி

வேலியே பயிரை மேய்ந்த கதை..  பொதுமக்களுக்கு இடையூறு சிக்கல்கள், குற்றங்கள் இழைக்கப்படும் போது உடனடியாக காவல்துறையின் உதவியை நாடுவர். இங்கு காவலரே  பொதுமக்களிடம் திருட்டுத் தொழில் செய்தது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்   மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துவ் வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணையில் ஈடுபட்ட போது இச்செயலில் ஈடுபட்டவர்  செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து உடனடியாக  சபரிகிரியை சுற்றி வளைத்து காவல்துறையினர்  கைது செய்தனர்.   கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாகினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 58). இவர் கடந்த 27ம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்துள்ளார். அப்போது, ​​அந்த வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையைப் பறித்துச் சென்றார்.

சபரி

இதேபோல் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கச்சாவடியை சேர்ந்த அம்சவேணி  (32) என்பவர் இருசக்கர வாகனத்தில் உடுமலை ரோடு பிஏபி அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இருவரும் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு பெண்களிடம் கொள்ளையடித்ததும், ஒரே நபர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி நகரின் உடுமலை ரோடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 150 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நகை பறிப்பு சம்பவத்தில் மாக்கினாம்பட்டி பகுதியில் வசிக்கும் தலைமைக் காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.

சபரிகிரி, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம்

இவர் கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், செட்டிபாளையம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அவர், சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டபோது, ​​நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து சபரி மீது கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சபரிகிரியை கைது செய்து அவரிடமிருந்து 7.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web