5 பேரை கேரளாவுக்கு திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை... தீவிரமாகும் சோதனைகள்!!

கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் இந்த அறிகுறிகளால் நிரம்பி வழிகின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா – தமிழக எல்லையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதன்படி குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா - குமரி எல்லையில் உள்ள 5 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன. அதில் பயணிப்பவர்கள் காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்கப்படுகின்றனர்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.அந்த வகையில் செப்டம்பர் 15ம் தேதி நேற்று பாறசாலையில் வசித்து வரும் தந்தை, மகன் ஒரு காரிலும், பூவார் பகுதியில் வசித்துவரும் மற்றொரு இளைஞரும் காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.தந்தையுடன் வந்த கல்லூரி மாணவர் ஒருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட தீவிர வாகனசோதனை மற்றும் உடல் கண்காணிப்பில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்த 5 பேரை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!