4 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!!

 
மழை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர்  11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் செப்டம்பர் 6ம் தேதி புதன்கிழமை இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web