அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக  பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்க போகிறது. அதே நேரத்தில் குமரிக்கடல் பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

இடி மின்னல் மழை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம்  மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது வரை  மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை

புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தமிழகம்,   புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  22, 23, 24  தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web