அக்டோபர் 10 வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த மழை அக்டோபர் 10ம் தேதி வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...