அலெர்ட்.. 7 மாவட்டங்களில் சூறாவளியுடன் கனமழை...!!

 
சூறாவளி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த மழை அக்டோபர் 7ம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை  பெய்யக்கூடும். கோவை திருநெல்வேலி மாவட்டங்களின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடி மின்னல் மழை

அக்டோபர் 3ம் தேதி நாளை தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  அக்டோபர் 4 முதல் 8 வரை தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்   மிதமான மழை  பெய்யக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.   நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை  பெய்யக்கூடும்.  
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   இன்றும் நாளையும்   தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு இலங்கை  கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு   65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மத்திய வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு இலங்கை  கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு   65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி  மணிக்கு 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு   55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web