சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை!
வங்கக் கடலில் உருவாகியுள்ள “மோந்தா” புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், ஆந்திரா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்ததால், பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கிய நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த இரண்டு மணிநேரம் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணிவரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
