ஒகேனக்கல் நீர்வரத்து: வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

 
ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 62 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 95 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 7.30 மணியளவில் 100,000 கனஅடியாகவும் ,   காலை  1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இருபுறமும் தண்ணீர் பாய்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், நீர்வரத்து குறைந்ததால், பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் ஆற்றங்கரையோரம் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான ஆற்றங்கரையோர பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அடுத்த செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web