டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?... தமிழக அரசுக்கு கோரிக்கை!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட  பல இடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

 மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இலகுவாக வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்படுவதும், அத்துடன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இது சரியில்லை என்று பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்து வருகிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து, மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுக்கடைகளை மட்டும் திறந்து வைப்பது நியாயமல்ல எனக் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றம்

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ மதுக்கடைகள் மக்கள் உயிர்க்காக்கும் அத்தியாவசிய சேவை அல்ல என்பதையும், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தவிதமான நன்மையுமில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் மட்டுமே முக்கியம்” என  வலியுறுத்தினார்.
அதிகரித்துள்ள மழை, வெள்ளம் காரணமாக பொதுமக்களின் வாழ்வு மிகவும் சிரமமாகி வரும் நிலையில், மதுக்கடைகளை திறந்து வைக்காமல், மழை நீங்கும் வரை அவற்றை மூடுமாறு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறியுள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!