மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

 
வைஷ்ணவி

பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திகேயன். இவர்   'பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் கும்பகோணத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திருவிடைமருதூர் பகுதியில் வசித்து வரும்   வைஷ்ணவி  நர்ஸாக பணிபுரிந்து   வந்தார். இவருக்கு வயது 22. வைஷ்ணவி  மருத்துவமனையில் உள்ள அறையில் வைஷ்ணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வைஷ்ணவி

இதனால் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த போலீஸார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி,  அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க  முயற்சித்ததில்   பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ்

 

வைஷ்ணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மகள் இறந்ததை தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும்,  மருத்துவமனையில் இருந்து நிர்வாகத்தினர் யாரும் வரவில்லை எனவும் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர். அத்துடன் உரிய விசாரணை சரியான நேரத்தில் நடத்தப்படும் என உறுதி அளித்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web