உஷார்... மர்ம காய்ச்சலால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.... WHO எச்சரிக்கை...!!

 
மருத்துவமனை

2019ல் சீனாவில் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்தது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தற்போது சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் நிமோனியா பரவல் அதிகரித்து வருகிறது.  இது குறித்து சீன ஊடகங்கள்   "நோயுற்ற குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன" என செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு   சீனாவிடம்   சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.



இதுகுறித்து WHO  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  “ சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.  அக்டோபர் முதல்   வடக்கு சீனாவில் காய்ச்சல் போன்ற நோய்கள்  கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன் சீனாவில் வசித்து வருபவர்கள்  பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.  அதன்படி 
 அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி செலுத்தலாம்.  
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 
தனிமைப்படுத்திக் கொள்ளுதல்  
சுயமருத்துவத்தை தவிர்த்து  பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல்.

மருத்துவமனை
 முகக்கவசம் கட்டாயம்.  
சுகாதாரமான காற்று  
கிருமி நாசினியால் அடிக்கடி கைகளை கழுவுதல்.
 உலகளவில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய்கள் பரவுவதைக் கண்காணிக்கும் அமைப்பான The Telegraph, ProMed  அமைப்பு சீனாவில் பரவும் நோய் குறித்து ”  இதுவரை கண்டறியப்படாத நிமோனியா” என  எச்சரிக்கை விடுத்துள்ளது.     சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில்  அனைத்து மருத்துவமனைகளும்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வருகையால் போராடி வருகின்றன எனத்  தெரிவித்துள்ளது..

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web