பெரும் அதிர்ச்சி.. ஆன்லைன் ஆர்டரில் மனிதக் கழிவு...!!

 
ஆன்லைன் ஆர்டர்

இங்கிலாந்தின் லங்காஷயரில் வசித்து வருபவர் பில் ஸ்மித். இவருக்கு வயது  59 . இவர் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே வசித்து வருகிறார். தனக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்காக, சூப்பர் மார்க்கெட் நிறுவனமான ஐஸ்லாந்தில் இருந்து ரூ15000க்கு   மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.அவரது ஆர்டரின் பேரில் டெலிவரி செய்யப்பட்ட மளிகைப் பொருட்களை தனது சமையலறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ஆன்லைன் ஆர்டர்

அப்போது, கை தவறி ஒரு பார்சல் கீழே விழுந்துவிட்டது. அதில்  கொடும் துர்நாற்றம் அடித்தது. அதில்  மனிதக் கழிவு கலந்திருப்பது தெரியவந்ததாக ஸ்மித் கூறியுள்ளார். ‘அதைப் பற்றிச் சொல்ல அருவருப்பு என்பதைத் வேறு வார்த்தைகள் இல்லை’ என ஸ்மித் கதறி செய்தி வெளியிட்டுள்ளார்.  மேலும் மனிதக் கழிவு கீழே விழுந்ததைப் பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன். கீழே என்ன கிடக்கிறது என்று யோசித்தேன். பின் மற்றொரு பையைத் திறந்த பார்த்தேன். அதிலும் அதுதான் இருந்தது. நான் மிகவும் வெறுத்துப் போயிருக்கிறேன். இது அருவருப்பானது என கூறியுள்ளார்.

ஆன்லைன் ஆர்டர்

சூப்பர் மார்க்கெட்டைத் தொடர்பு கொண்டு, எனக்கு எந்த இழப்பீடும் வேண்டாம். அனுப்பிய அசிங்கத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் என கூறினேன். அவர்கள் தங்கள் கொடூரமான தவறை நியாயப்படுத்தாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்   என்று சொல்கிறார் ஸ்மித்.சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அந்நாட்டு சுகாதாரத்துறை சூப்பர் மார்க்கெட்டில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web