பயங்கரம்... கணவன், மனைவி, 2 குழந்தைகள், 3 நாய்கள் சுட்டுக் கொலை...!!

 
சுட்டுக்கொலை

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. தினசரி 5க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி செல்லும் சிறுவன் தொடங்கி அனைவரின் கையில் துப்பாக்கி.  சிகாகோ மாகாணம் வில் கவுண்டியில் ரோமியோவில்லி பகுதியில்  கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் என அனைவரும் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.  இவர்களுடைய உறவினர் ஒருவர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனது.

அமெரிக்க போலீஸ்

இதனையடுத்து உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டு  காவல்துறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை செய்த போது, வீட்டில் உள்ள அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை  ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தம்பதியின் பெயர் ஆல்பர்டோ ரோலன், ஜொரைடா பார்த்தலோமி என தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி

உயிரிழந்த குழந்தைகள்  7 மற்றும் 10 வயது.  என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அதிகாலைக்கு இடையே நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்து இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் மற்றவர்களை கொன்று, கடைசியில் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.    

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web