வீடியோ.... இனி நான் “பாத்திமா”!! நடிகை ராக்கி சாவந்த் அந்தர் பல்டி!!
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஹஜ் உம்ரா புனிதப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளார். அவர் தமது பெயரை ஃபாத்திமா என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன்னுடைய நடவடிக்கைகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அத்துடன் அவர் கான் துரானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கணவருக்கு எதிராக புகார் அளித்தார். அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக ராக்கி சாவந்த் கூறினார். திடீரென ராக்கி சாவந்த் சவுதி அரேபியாவுக்கு உம்ரா சென்று திரும்பியுள்ளார். ஹிஜாபுடன் மும்பை விமான நிலையத்துக்கு வந்த நடிகை ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர்கள் ஓடோடி சென்று கழுத்தில் மலர் மாலையை போட முயன்றனர். அதை, மறுத்த ராக்கி சாவந்த், மாலையை கையில் வாங்கி கொண்டார். பின்னர், அவரை ராக்கி சாவந்த் என பத்திரிகையாளர்கள் அழைத்த போது அதைத் தடுத்து, ’என்னை இனி ஃபாத்திமா என அழையுங்கள்’ என்றார். அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
’கணவரால் இஸ்லாம் மதத்துக்கு மாறிய நீங்கள், சட்டத்துக்காக பெயரை ஃபாத்திமா என மாற்றி கொண்டீர்களா?’ என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ராக்கி சாவந்த், ’கடவுள் என்னை அழைத்ததால் ஹஜ் உம்ரா சென்றேன். கடவுளின் விருப்பம் இதுதான். சட்டத்துக்காக எனது பெயரை மாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை’ என்றார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவர் முழுவதும் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டார் எனக் கூறினர். இதற்கு முன்பாக உம்ராவில் இருந்து அழுது கொண்டே ராக்கி பகிர்ந்த வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!