என்னால் முடியல.. நடிகை ராக்கி சாவந்த் கணவர் நள்ளிரவில் கைது!

 
ராக்கி சாவந்த்

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த். இந்தி சேனலில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வாயிலாக மேலும் பிரபலம் அடைந்தார். தமிழில் சரத்குமார், லைலா நடித்த ‘கம்பீரம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.  இவர், அடில் துராணி என்பவரை, திருமணம் செய்தார். இருவரும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தனர். இந்நிலையில், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று அதிகாலை வந்த ராக்கி சாவந்த், கணவர் மீது பரபரப்பான புகார் அளித்தார்.

கணவர், தன்னை தாக்கியதாகவும், தன்னிடமிருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாகவும் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அடில் துராணியை கைது செய்தனர். ஆனால், அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக அடில் கான் தரப்பில் கூறப்பட்டது.

ராக்கி சாவந்த்

ராக்கி சாவந்த், செய்தியாளர்களிடம் கதறி அழுதபடியே கூறுகையில், அடில் துராணிக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு நடந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு முறை புகார் கொடுத்துள்ளேன். இனியும் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்னை எப்போதும் அடித்துக்கொண்டே இருப்பார். என்னிடம் முழு ஆதாரம் இருக்கிறது என்றார்.

ராக்கி சாவந்த் சமீபத்தில்தான் டெல்லியைச் சேர்ந்த அடில் துராணி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த மாதம்தான் திருமணத்தை முறைப்படி அறிவித்தனர். ஆனால், அறிவித்த சில நாள்களில் தன்னுடைய கணவர், தன்னை ஏமாற்றுவதாகவும், வேறு பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

பணம், நகையைத் திருடிச் சென்றார்!' - நடிகை ராக்கி சாவந்த் புகார்; கணவர் கைது

அதோடு திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் தன்னுடைய கணவரைப் பிரிந்துவிட்டதாக நேற்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web