ரோடே இல்ல.. எதுக்கு பிரிட்ஜ்?.. நட்ட நடு வயலில் பாலத்தை கட்டிய பீகார் அரசு!

 
பீகார் பாலம்

பீகார் மாநிலத்தில் உள்ள அராரிரியா மாவட்டத்தில் ஒரு விவசாய நிலம் உள்ளது. இந்த வயலில் தற்போது பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையே இல்லாத வயல்வெளியில் பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலம் அரசு சாலை கட்டுமான துறையால் கட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியதால் தற்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரூ.3 கோடி மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், தனியார் நிலம் என்பதால், முதலில் பாலம் கட்டியதால், சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பீகாரில் சமீபத்தில் 14 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி