மாப்பிள்ளை பிடிக்கலை... கிணற்றில் குதித்த தங்கையைக் காப்பாற்ற குதித்த அண்ணனும் பலியான சோகம்!

 
நந்தினி

தனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியும், அதே நபருடன் திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால், எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து தங்கையைக் காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடகா மாநிலம், சிஞ்சோலுவைச் சேர்ந்தவர் சந்தீப்(23). இவரது தங்கை நந்தினி(19). நந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நந்தினியின் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

நந்தினி

இதனால் மனஉளைச்சலில் இருந்த நந்தினி, நேற்று மாலை திடீரென கிணற்றில் குதித்தார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த நந்தினியின் சகோதரர் சந்தீப் தங்கையைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

உடல்

தகவல் அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து சந்தீப், நந்தினி உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிஞ்சோலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம், படபள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web