“திமுக 8% வாக்கு வாங்கிட்டா அரசியல் பேசுறதை விட்டுடறேன்...” சீமான் சவால்!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியைப் போல வாக்குக்கு பணம் தராமல், யாருடனும் கூட்டணி வைக்காமல் திமுக தனித்து போட்டியிட்டு 8 % வாக்கை பெற்று விட்டால் நான் அரசியல் பேசுவதை விட்டுவிடுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் தற்போது தேவையான வளர்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளுக்குப் பின் வளர்ச்சி அடையும் என்று கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு என்ன வளர்ச்சி திட்டத்தை கொடுக்கப் போகிறது. அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்குவதே வளர்ச்சியாக தெரிகிறது. 9 இடங்களில் துறைமுகம் கட்டப்படுவதாக கூறப்படும் நிலையில், தற்போது இருக்கும் துறைமுகங்களில் வேலைகள் முறையாக நடைபெறவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்காக இருக்கும் ராணுவத்துக்கு தேவையான ரஃபேல் விமானம் உள்ளிட்டவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி என்றால் இந்திய ராணுவத்துக்கு என்ற பாதுகாப்பு மற்றும் ரகசியம் என்ன உள்ளது. நாட்டின் வளர்ச்சி எங்கு உள்ளது.

சீமான் விஜய்

தேர்தல் நேரத்தில் பெரியாரை சீமான் தவறாக பேசிவிட்டார். எனவே அவருக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்று கூற தைரியம் இருக்கிறதா? ஏனென்றால், பெரியாருக்கு வாக்குகள் கிடையாது. நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வரும் போது, எனது உச்சத்தை உதறிவிட்டு வந்தேன் என்று விஜய் கூறும் போது அதற்கு எதிராக ஒரு கேள்வி வருகிறது. நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன்.

2007, 2008ம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன். ஊழலில் தழைத்த திமுக மற்றும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சண்டையிட்டு வரும் நிலையில், இரு கட்சிகளையும் இணைத்தவாறு தமிழக வெற்றி கழகம் வரும் போது முதலில் அந்த கட்சியையே முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

சீமான்

பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவராக அறிவிக்கப்பட்டதற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரை வார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம்? அண்ணா கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், ஆட்சி நிறைவு பெற ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். இதனால், ஆட்சி அதிகாரம் அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி வசம் சென்றது. அந்த ஆட்சியில் ஒரே ஒரு அமைச்சர் மீது மட்டும் தான் ஊழல் புகார் எழுந்தது. அது கலைஞர் கருணாநிதி தான். நெடுஞ்செழியனிடம் செல்லாமல் கொடுஞ் சனியனிடம் சென்றதால் நாடு நாசமாகிவிட்டது. திமுக தனித்து நின்று 8 சதவீத வாக்கு வங்கியை பெற்று விடட்டும். நான் அரசியல் பேசுவதை விட்டுவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?