மகன் இறந்துவிட்டால் தாய்க்கு சொத்தில் உரிமை கிடையாது.. . அதிரடி தீர்ப்பு!!

 
உயர்நீதிமன்றம்

நாகப்பட்டினத்தில் வசித்து வரும்   பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸ்-க்கும்,  அக்னஸ் என்பவருக்கும்  2004ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை.  இந்நிலையில் மோசஸ் கடந்த 2012ல் உயிரிழந்து விட்டார்.  உயில் எதுவும் எழுதி வைக்காத மோசசின் சொத்துக்களில் பங்கு கேட்டு அவரது தாய் பவுலின் வழக்கு பதிவு செய்தார். இந்த  வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம், மோசசின் சொத்தில், அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவு பிறப்பித்து விட்டது.

உயர்நீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறை!!


 அக்னஸ் இந்த தீர்ப்பை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட  வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, வாரிசுரிமை சட்டம் கிறிஸ்துவ 42வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே  சொத்தில் பங்கு .  மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால் தான் அவரது தந்தை சொத்துக்கு வாரிசுதாரர் ஆவார். தந்தையும் இல்லை என்றால் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என மேற்கோள் காட்டினார்.  

சென்னை உயர்நீதிமன்றம்


இதையடுத்து, திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான உரிமையே கிடையாது.  மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது .  தாய் பங்கு கேட்க முடியாது என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு  வழங்கினர்.  வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு நீதிமன்றம் பாராட்டுக்களை  தெரிவித்துள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web