9 சிம்கார்டுகளுக்கு மேல் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை... இன்று முதல் அமலுக்கு வந்த சட்டம்!

 
சிம் கார்டு
 


தொலைத்தொடர்பு துறை சிம்கார்டுகள் குறித்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருக்க அனுமதி இல்லை.  இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துள்ளனர்.  அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

ஆதார் சிம்

இந்நிலையில் ஒரு தனிநபர் தன்னுடைய பெயரில் 10 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அவருக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படும்.
இவர்கள் மீதான  குற்றம் ஒரு முறை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை அவர் மறுபடியும் செய்தால், அவருக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சிம் கார்டுகள்

மேலும் ஒரு தனிநபர் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை தன் பெயரில் வைத்திருந்தால் அவருக்கு 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும். இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!