சென்னையில் குவியும் சர்வதேச வீரர்கள்... நாளை ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் தொடக்கம்!

 
செஸ்
சென்னையில் நாளை ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் தொடங்க உள்ளதையடுத்து சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அக்டோபர் 16, 2023 முதல் மார்ச் 3, 2024 வரை நடத்தப்பட்ட 20 தொடர்களின் வாயிலாக 2 பேர் செஸ் போட்டிகளில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றுள்ளனர். 8 பேர் ஐஎம் நார்ம்ஸை பூர்த்தி செய்துள்ளனர். 
இந்நிலையில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடரின் 2வது கட்ட போட்டி நாளை ஜூலை 21ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் நடைபெற உள்ளது. 10 தொடர்களை உள்ளடக்கிய இந்த போட்டிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு சரோவர் ஓட்டலில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

செஸ்
ஒவ்வொரு தொடரிலும் 10 பேர் கலந்து கொள்வார்கள். இதில் 5 பேர் இந்தியர்களாகவும், 5 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் அலெக்சாண்டர் ஸ்லிஷெவ்ஸ்கி, ஸ்லோவேக்கியாவின் கிராண்ட்மாஸ்டர் மிகுலாஸ் மானிக், துர்க்மேனிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஒராஸ்லி அனாகெல்தியெவ், மங்கோலியாவைச் சேர்ந்த மகளிர் கிராண்ட் மாஸ்டர் உரிந்துயா ஊர்ட்சைக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

செஸ்
இவர்களுடன் டெல்லியை சேர்ந்த ஃபிடே மாஸ்டர் டாவிக் வாதவான், தமிழகத்தைச் சேர்ந்தஎன்.லோகேஷ், எஸ்.எஸ்.மணிகண்டன், ஜி.ஆகாஷ், கர்நாடகாவைச் சேர்ந்த ஃபிடே மாஸ்டர்சாத்விக் அதிகா, தெலங்கானாவைச் சேர்ந்த ஃபிடே மாஸ்டர் ஆதிரெட்டி அர்ஜூன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு தொடருக்கும் ரூ.85 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web