தாலி மஞ்சவாசம் கூட மாறலயே... லாரி மீது கார் மோதி புதுமண தம்பதிகள் உட்பட 5 பேர் பரிதாப பலி!

 
பாலகிரண் - காவ்யா

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வெங்கடபூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாலகிரண். இவருக்கும் காவ்யாவுக்கும் பிப்ரவரி 29ம் தேதி திருமணம் நடந்தது.இவர்களின் திருமண வரவேற்பு மார்ச் 3ம் தேதி ஷமீர்பேட்டையில் நடந்தது.

இந்நிலையில் புதுமண தம்பதிகள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய விரும்பினர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் காரில் சென்றனர். திருமலை கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திருப்பதியில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அலகட்டா மண்டல் நல்லகட்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் லாரி நின்றதை கார் டிரைவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், லாரி மீது கார் மோதியது. இதில், காரில் இருந்த புதுமண்டம்பதி பாலகிரண், காவ்யா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த தம்பதி உட்பட 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web