அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவனுக்கு பதில் குழந்தைகளுக்கு ஓய்வூதியம்.. மத்திய அரசு அதிரடி... !

 
சேமிப்பு

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே உயிரிழந்தால் அவர்களுக்கு வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவிக்கு  குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.     இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சேமிப்பு

அதில்   "ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி  அரசு பெண் ஊழியர்கள் தங்களுடைய காலத்திற்கு பிறகு  கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளுக்கு  குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம். இதுகுறித்து தங்களின் அரசு துறைத்தலைவரிடம்  எழுத்துமூலமாக ஒப்பம்  எழுதி தர வேண்டும்.  

வயதானவர்கள்

கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை  தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் இவைகளின் கீழ் வழக்கு தொடர்ந்த   அரசு பெண் ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வரப்பிரசாதமாக அமையும்.  ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்த நிலையில், அவர்களுக்கு குழந்தைகள் இல்லையெனில்  அவருடைய கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.  அவரது பிள்ளை மைனராகவோ  மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலருக்கு  ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த பிள்ளை, 'மேஜர்' ஆன பிறகு, பாதுகாவலரிடமிருந்து பிள்ளைக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.  என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web