திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்!

 
கடல் உள்வாங்கியது
நேற்று புரட்டாசி மாத பெளர்ணமி தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் குறிப்பிட்ட நேரம் வரை உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பெளர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை