"நாங்க ED Officers".. சினிமா பாணியில் பயங்கர கொள்ளை.. தொழிலதிபரிடம் இருந்து 1 கோடியே 69 லட்சம் அபேஸ்..!
![திருப்பூர் மோசடி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/7b9be9f447ddc60a9d1ecfce39053dd0.jpg)
திருப்பூரில் நூல் கடை உரிமையாளரிடம் அமலாக்கத்துறை என கூறி 1 கோடியே 69 லட்சம் கொள்ளையடித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் நூல் வியாபாரம் செய்து வருபவர் அங்கு ராஜ். இவரின் கடைக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்த 5 பேர் அமலாக்கத்துறை என கூறி, சோதனை மேற்கொண்டு அவர் கடையில் வைத்திருந்த 1 கோடியே 69 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் கணக்கு காட்டி விட்டு பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த அங்கு ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விஜய் கார்த்திக், நரேந்திர நாத், ராஜசேகர், லோகநாதன் மற்றும் கோபிநாத் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய 3 கார் மற்றும் செல்போன் உட்பட 1 கோடியே 10 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்,
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க