1,75,000 டிக்கெட்டுகள் விற்பனை... அக்டோபர் 19ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டி தொடக்கம்!

 
இந்தியா

 இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்தத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில்   அக்டோபர் 19ம் தேதி துவங்குகிறது. ஒருநாள் போட்டிகள் பெர்த், அடிலெய்டு, சிட்னியிலும், டி20 போட்டிகள் கேன்பெரா, மெல்பர்ன், ஹூபர்ட், கோல்ட் ஹாஸ்ட், பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.

நீண்ட நாள்களுக்குப் பின்னர், இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோஹ்லி மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்க உள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.  

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்  சரிக்கு சரி போட்டியில் சவால்களுடன் விளையாடி வருபவை.  உலகக் கோப்பையின் முக்கியப் போட்டிகளில் இந்திய அணியை பல்வேறு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்துள்ளதால்  2  அணி ரசிகர்களும் பாம்பு - கீரியுமாக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்வதும் உண்டு.


இதனால் இந்தியா ஆஸ்திரேலியே  போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 1 லட்சம் இருக்கைகள் கொண்ட மெல்பர்ன் திடலில் அக்டோபர் 31 ம் தேதி நடைபெறும் 2-வது டி20 போட்டிக்கான 95,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளது. இதனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்  தெரிவித்துள்ளது.
இந்த டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில்  விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் டிக்கெட் விற்பனை அமோகமாக களைகட்டியுள்ளது. டி20 தொடருக்கு மட்டும் மொத்தமாக இதுவரை 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக மெல்பர்ன் கிரிக்கெட் திடல் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?