இன்று முதல் இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட் விற்பனை!!
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியா -ஆப்கானிஸ்தான், அக்டோபர் 19 புனேவில் இந்தியா -வங்காளதேசம் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த 3 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று இரவு 8 மணி முதல் 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை தர்மசாலா, லக்னோ, மும்பை மைதானங்களில் நடக்கும் ஆட்டங்களுக்கும், செப்டம்பர் 2ம் தேதி பெங்களுரு மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டங்களுக்கும், செப்டம்பர் 3ம் தேதி அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கலந்து கொள்ளும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து அகமதாபாத்தில், தங்கும் விடுதி கட்டணங்கள் 10 மடங்கு வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!