சைதை துரைசாமியின் மகனை தேடும் பணியில் இந்திய கடற்படை... !​​​​​​​

 
வெற்றி துரைசாமி

அதிமுக பிரமுகரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி . இவர் தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்திற்கு  சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கார்  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால்  கார் மலைப்பகுதியில் இருந்து உருண்டது. அருகில் இருந்த   சட்லஜ் ஆற்றில் விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  

வெற்றி துரைசாமி

இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் நண்பர்  கோபிநாத்   படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார்.

சைதை துரைசாமி

இவரை  தேடும் பணி இன்று  3வது நாளாக தொடரும்  நிலையில்  பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணியில், இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் பிரதேசத்திற்கு  விரைந்துள்ளனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web