பகீர் வீடியோ.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தை சரமாரியாக சுட்டுக் கொல்லும் கொடூர கணவர்!
ராஜஸ்தானின் பலோடிய பகுதியை சேர்ந்த அனாமிகா பிஷ்னோய் என்ற பெண்ணை கொடூரமாக கொல்லப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வரதட்சணை கொடுமையால் கணவரைப் பிரிந்த பிறகு அவர் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். மனைவியை கொன்ற வழக்கில் அவரது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
#सोशलमीडिया #इंफ्ल्यूंसर का #मर्डर #सीसीटीवी में क़ैद
— Gyanendra Shukla (@gyanu999) February 26, 2024
राजस्थान के फलोदी में नारी कलेक्शन सेंटर चलाने वाली अनामिका बिश्नोई की गोली मारकर हत्या कर दी गई. सूचना पर पहुंची पुलिस ने जब सीसीवीटी फुटेज खंगाले तो होश उड़ा देने वाला सच सामने आया. पता चला कि इस वारदात को महिला के पति… pic.twitter.com/pMWRS8SouM
இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிஷ்னோய், அவரது கணவரால் சுடப்படுவதை வீடியோவில் காணலாம். இந்த தாக்குதலில் அந்த பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. புல்லட் காயத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது கணவர் மஹிராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வரதட்சணை கேட்டு கொடுக்காததாலும், தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாலும் கணவர் ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாக தெரியவந்துள்ளது.
பிஷ்னோய் தனது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இந்தியாவில் புதிதல்ல, 2022 ஆம் ஆண்டில், 22 வயதான சமூக ஊடக செல்வாக்கு மிக்க லீனா நாக்வன்ஷி தனது மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இத்தகைய கொடூரமான சம்பவம் ஏன் பிரபலமான பெண் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எளிதாக நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
ட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!