அனைத்துக் கட்சிகளிலும் ரவுடிகள் சேர்ந்து விட்டனர்; கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி!

ரவுடிகள் அதிகரித்து விட்டனர். அனைத்து கட்சிகளிலும் ரவுடிகள் அதிகரித்து விட்டனர். எனவே முன் பகையால் அவர்கள் கொலைச் செய்யப்படும் போது, அது அரசியல் கொலையாகப் பார்க்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இன்று சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில் வலம்புரி செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடையை கார்த்தி சிதம்பரம் எம்.பி., திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முறைகேடு நடந்துள்ளதால் இந்த நீட் தேர்வு முடிவுகள் படி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கக்கூடாது. மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் அல்லது +2 மதிப்பெண்கள் படி மாணவர்களை சேர்க்க வேண்டும். ரவுடிகள் அதிகளவில் அரசியலுக்குள் வந்து விட்டனர். இதனால் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளுக்கு அரசியல் பின்னணி கிடையாது.அனைத்துக் கட்சிகளிலும் ரவுடிகள் சேர்ந்து விட்டனர். அவர்கள் முன்பகையால் கொல்லப்படும் போது அரசியல் கொலையாக பார்க்கப்படுகிறது. ரவுடிகள் மீது ஏன் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் கூலிப்படையை போலீசார் தடுக்க வேண்டும்.
என்கவுன்ட்டர் என்பது ஏற்கமுடியாத ஒன்று. நீதிமன்றம் தான் தண்டனை வழங்க வேண்டும். உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுகின்றனர். கூலிப்படைகளை தடுக்க வேண்டியது போலீசாரின் கடமை. அதிகாரிகளை மாற்றுவது அரசின் விருப்பம். ஆக்கபூர்வமாக செயல்படும் அதிகாரிகள் வரவேண்டும். ஒருவரது பின்னணியை அறிந்தே அவர்களை அரசியல் கட்சிகளில் சேர்க்க வேண்டும். கட்சிகள் பதவி கொடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் கவலை தேவையில்லை. அதனைப் பெற சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த ஆண்டு கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருவதால் அவர்களே காவிரியில் தண்ணீரை திறந்து விடுவர்.மின் கட்டன உயர்வு தேவையற்றது. மக்கள் மீது பாரத்தை சுமத்தியிருக்க கூடாது. மின்சார வாரியத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அப்போது தான் மின் கட்டணம் உயராது. இது குறித்து பேச அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா