ஒரு மாநில முதல்வரை இப்படி தான் நடத்துவீங்களா? முதல்வர் மு.க ஸ்டாலின் காட்டம்!

 
ஸ்டாலின்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய முதல்வர்கள் கூட்டணி புறக்கணித்துள்ளது.


ஆனால், கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். வெளியே வந்த அவர், கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். முதல்வர் மம்தா கூறியதாவது; கூட்டத்தில் பேச என்னை அனுமதிக்கவில்லை,'' என குற்றம் சாட்டினார். இதுகுறித்து, தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

தமிழக முதல்வர் வெளியிட்ட பதிவில், கூட்டத்தில் முதல்வரை இப்படித்தான் நடத்துகிறீர்களா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இது கூட்டாட்சியா?? என முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நினைத்து ஒடுக்கிவிடக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே கூட்டமைப்புகளின் தத்துவம் என்று தனது x தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web