8ம் வகுப்பு படிச்சாலே போதும்... ரூ58000 சம்பளத்தில் அரசு வேலை.. மிஸ் பண்ணீடாதீங்க!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் - 11
ஜீப் டிரைவர் - 09
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - 02
இரவு காவலர் - 02
மாதச் சம்பளம்
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.58,100
ஜீப் டிரைவர் - ரூ.19,500 - ரூ.71,900
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - ரூ.15,900 - ரூ.58,500
இரவு காவலர் - ரூ.15,700 - ரூ.58,100
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர் - 8ம் வகுப்பு தேர்ச்சி
ஜீப் டிரைவர் - 8ம் வகுப்பு தேர்ச்சி
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - 10ம் வகுப்பு தேர்ச்சி
இரவு காவலர் - எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு :18 முதல்32 வயது வரை இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான தகுதிச் சான்றுகளுடன் இணைத்து பதிவஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 31,2023
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்,
ஊரக வளர்ச்சி அலகு,
மூன்றாவது தளம் (E பிளாக்),
மாவட்ட ஆட்சியரகம்,
திருப்பத்தூர்-635601
என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...